சென்னை: கிறிஸ்மஸை ஒட்டி, நாளை மற்றும் 30-ம் தேதி தாம்பரம் – மங்களூரு(06129) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் ரயில் நின்று செல்லும். பாலக்காடு, சொரனூர் மற்றும் திரூரில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
The post கிறிஸ்மஸை ஒட்டி, நாளை மற்றும் 30ம் தேதி தாம்பரம் – மங்களூரு இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.